இலங்கை

இலங்கையில் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்த திட்டம்!

இலங்கையில் அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஆளும் கட்சி தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் அடுத்த ஆண்டு நவம்பர் மாத இறுதிக்குள் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 2025 க்கு முன் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதில் ஆளும் கட்சி கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவை பொதுக் கூட்டணியின் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இது தொடர்பான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!