வட அமெரிக்கா

விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் – ஜோ பைடன் நம்பிக்கை

ஹமாஸ் கிளர்ச்சிக் குழுவின் பிடியில் உள்ள பிணையாளிகளை விடுவிப்பதற்கான உடன்பாடு விரைவில் எட்டப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

இடையிடையே சண்டையை நிறுத்துவதற்குப் பரிமாற்றமாகப் பிணையாளிகள் விடுவிக்கப்படுவர் என்று தெரிகிறது.

ஹமாஸ் குழுவினரைச் சந்தித்துப் பேசவிருப்பதாக அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கமும் தெரிவித்துள்ளது. அதனால் விரைவில் உடன்பாடு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை வலுத்துள்ளது.

அல் ஷிபா மருத்துவமனையில் இருந்து 28 குறைப்பிரசவக் குழந்தைகளை வெளியேற்றுவதில் அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கம் முக்கியப் பங்காற்றியது. அந்தக் குழந்தைகள் தற்போது எகிப்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பிணையாளிகளை விடுவிக்கும் உடன்பாட்டை எட்டுவதில் சின்னச் சின்னக் கருத்து வேறுபாடுகளே இருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றுக்குத் தீர்வு காணும் முயற்சியில் கத்தார் ஈடுபட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!