இலங்கை செய்தி

பாடசாலை மாணவர் ஒருவரை காணவில்லை

 

குருநாகலில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

குறித்த மாணவன் நேற்று முன்தினம் (16) பாடசாலைக்கு சென்றதாகவும், அதன் பின்னர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் வசிக்கும் 15 வயதுடைய மாணவன் எனவும், மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வியில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த மாணவர் நேற்று (16) கொழும்பு அளுத்கடை பகுதியில் உள்ள ஒரு பக்க வீதியில் மற்றுமொரு நபருடன் பயணித்தமை சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம், திபுல்வெவ மற்றும் குருநாகல் கட்டுபொத பொலிஸ் நிலையங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!