ஐரோப்பா செய்தி

வீட்டுக்குள் பாய்ந்த துப்பாக்கி குண்டு.,உயிர் தப்பிய சிறுமி – பிரான்ஸில் அரங்கேறிய சம்பவம்!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் புறநகர் பகுதியில் எதிர்பாராத நேரத்தில் இடம்பெற்ற சம்பவத்தில் சிறுமி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

La Courneuve என்ற உள்ள வீடொன்றுக்குள் திடீரென பாய்ந்த துப்பாக்கி ரவையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அதிஷ்ட்டவசமாக சிறுமி ஒருவர் காயமின்றி உயிர்பிழைத்துள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இங்குள்ள வீடொன்றின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் பாய்ந்துள்ளது.

அங்கு வசிக்கும் சிறுமி ஒருவரது கட்டிலில் சென்று குறித்த ரவை துளைத்துக்கொண்டு நின்றது. கட்டிலை துளைத்து நின்ற 7.62 mm கலிபர் வகை ரவை கைப்பற்றப்பட்டதுடன், ஆய்வுக்குட்படுத்தப்பட்டது. மேலும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!