ஐரோப்பா

எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: அமெரிக்கா,பிரிட்டன் மீது ரஷ்யா திடீர் குற்றச்சாட்டு

ஜேர்மனியையும் ரஷ்யாவையும் இணைக்கும் எரிவாயுக்குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாக திடீரென ரஷ்ய தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

New York Times பத்திரிகை, ஜேர்மனிக்கு ரஷ்யா எரிவாயு வழங்கிவந்த Nord Stream எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில், புடினுடைய எதிரிகள் இருப்பதாக, அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக, முன்பு செய்தி வெளியிட்டிருந்தது.

அது வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு சதிச்செயல் என்று கூறப்பட்ட நிலையில், உக்ரைன் ஆதரவு அமைப்பு ஒன்று Nord Stream எரிவாயுக் குழாயை சேதப்படுத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுவதாக அந்த பத்திரிகை தெரிவித்திருந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டுக்கு உக்ரைன் தரப்பு மறுப்பும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தற்போது, திடீரென பிரித்தானியா மற்றும் அமெரிக்கா மீது ரஷ்யா பழியைப் போட்டுள்ளது. பால்டிக் கடலுக்கடியில் செல்லும் எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கிரெம்ளின் செய்தித்தொடர்பாளரான Dmitry Peskov ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், பால்டிக் கடலுக்கடியில் செல்லும் எரிவாயுக் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதன் பின்னணியில் பிரித்தானியாவும் அமெரிக்காவும் இருப்பதாகவும், அது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்றும் கூறியுள்ளார்.ஆனால், அது தொடர்பான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்