உலக வெப்பநிலை உச்சத்தை எட்டியது

உலகப் பெருங்கடலின் வெப்பநிலை இந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது பூமியின் காலநிலை, கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கரையோர மக்களை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு தரவுகளின்படி, கடல் மேற்பரப்பு வெப்பநிலை நேற்று 20.9 டிகிரி செல்சியஸ் ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன், 2016ல் இதற்கு நெருக்கமான மதிப்பு பதிவு செய்யப்பட்டது. மனித செயல்பாடுகள் உலக கடல் வெப்பநிலை அதிகரிப்பை முதன்மையாக பாதித்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
அவர்களின் கூற்றுப்படி, தொழில்துறை யுகத்தின் தொடக்கத்திலிருந்து மனித நடவடிக்கைகளால் உற்பத்தி செய்யப்படும் அதிகப்படியான வெப்பத்தில் 90 சதவீதத்தை கடல்கள் உறிஞ்சியுள்ளன.
(Visited 15 times, 1 visits today)