இலங்கை செய்தி

கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனர் தெரிவித்துள்ளார்.

13வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (01) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், அதிகாரப் பகிர்வை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்று குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரங்கள், காணி அதிகாரங்கள், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பிலும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தமது கூட்டணியின் பிரேரணை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

குறித்த பிரேரணை தொடர்பில் இந்திய அரசாங்கத்தின் கவனத்தை ஈர்ப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

See also  ஈரானில் ஐந்து நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளதாக அறிவிப்பு

இதேவேளை, 13வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

(Visited 12 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content