இலங்கை

வவுனியாவில் வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

வவுனியா பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் இன்று (29) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பூந்தோட்டம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வாகனத்துடன் எதிரே வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளும் பெரும் சேதமடைந்துள்ளது.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை பூந்தோட்டம் குடியிருப்பு வீதியில் மாலை வேளைகளில் அதிகமான வாகனங்கள் பயணித்துவரும் நிலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 12 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்