செய்தி தென் அமெரிக்கா

அர்ஜென்டினாவில் கடும் பொருளாதார நெருக்கடி!! வறுமையால் வாடும் மக்கள்

லத்தீன் அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் அர்ஜென்டினாவில் ஆண்டு பணவீக்கம் ஜூன் மாதத்தில் 115 சதவீதத்தை தாண்டியது.

இதன் விளைவாக, அர்ஜென்டினா மக்கள் தங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த அத்தியாவசிய அடிப்படை உணவுப் பொருட்களை மட்டுமே வாங்க ஆசைப்படுவதாக கூறப்படுகிறது.

அங்கு மலிவான உணவுப் பொருட்களை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலை தொடர்ந்தால், ஆண்டு இறுதிக்குள் அர்ஜென்டினாவின் பணவீக்கம் 140 சதவீதத்தை தாண்டும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அர்ஜென்டினாவில் கடந்த ஆண்டு முழுவதும் நீடித்த பொருளாதார நெருக்கடியின் விளைவாக, நாட்டின் மக்கள்தொகையில் 40 சதவீதம் பேர் இப்போது வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு பகுதியாக மாறியுள்ளனர்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து அர்ஜென்டினா பெற்ற 44 பில்லியன் டொலர் கடனுக்கான மீள் மதிப்பீடு இந்த வாரம் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், ‘பெசோ’ மாற்று விகிதத்தின் மதிப்பிழப்பு, கடும் வறட்சி காரணமாக விவசாய ஏற்றுமதி குறைந்து வருதல், அந்நிய கையிருப்பு சரிவு போன்ற காரணங்களால் IMF கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை மீட்டமைக்குமாறு அர்ஜென்டினா கோரியுள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!