இந்தியா

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்துக்கு அஜித் பவார் கடிதம்

அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 40 எம்.எல்.ஏ-க்கள் தனி அணியாக பிரிந்து பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே அமைச்சரவையில் அஜித் பவார் மற்றும் அவரை ஆதரிக்கும் 8 எம்.எல்.ஏ-க்கள் கடந்த 2ம் திகதி அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இன்று சரத்பவார் மற்றும் அஜித் பவார் அணியினர் தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை மும்பையில் குவித்துள்ளனர்.

இதில், அஜித் பவாருக்கு ஆதரவாக 30 எம்எல்ஏக்களும், சரத் பவார் கூட்டிய கூட்டத்தில் 17 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி அஜித் பவார் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், மும்பையில் நடந்த கூட்டத்திற்கு பிறகு அஜித் பவார் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் சொகுசு விடுதியில் தங்குவதற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!