இலங்கை

எரிபொருளுக்கு தட்டுப்பாடா? – அமைச்சர் விளக்கம்!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோலியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜிசேகர உறுதியளித்துள்ளார்.

ஒக்டேன் 95 ரக பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகிய நிலையில், அமைச்சர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் லங்கா-இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனம் (LIOC) ஆகிய இரண்டிற்கும் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் ஒக்டேன் 95 அல்லது வேறு எந்த பெற்றோலிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் ஒக்டேன் 95 இன் நாளாந்தத் தேவை, 80 – 100 மெட்ரிக் டொன்கள் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வரும் 22 ஆம் திகதி 9000 மெட்ரிக் டன் பெற்றோல் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!