இந்தியா

4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் ஒட்டிப் பிறந்த குழந்தை!

பீகாரில் 4 கால்கள், 4 கைகள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டம், சாப்ராவில் உள்ள சஞ்சீவானி முதியோர் இல்லத்தில் நேற்று பிரசுதா பிரியா தேவி என்ற பெண்ணிற்கு பெண் குழந்தையொன்று பிறந்தது.நான்கு கைகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு காதுகளுடன் பிறந்த அக்குழந்தையை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.ஆனால் ஒரே ஒரு முதுகு தண்டு மற்றும் ஒரு தலை மட்டுமே இருந்தது.

இக்குழந்தை குறித்து மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் அனில் குமார் பேசுகையில்,பிரசுதா பிரியா தேவிக்கு ஒரு தலை, நான்கு காதுகள், நான்கு கால்கள் மற்றும் நான்கு கைகள், இரண்டு முள்ளந்தண்டு வடங்கள் கொண்ட குழந்தை பிறந்தது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அக்குழந்தையின் மார்பில் 2 துடிக்கும் இதயங்கள் இருந்தன. பிறந்த அந்தக் குழந்தை துரதிர்ஷ்டவசமாக 20 நிமிடங்களுக்குப் பிறகு இறந்தது.

இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் அரிதாகவே நடக்கும். ஒரு பெண்ணின் கருப்பையில் ஒரு முட்டையிலிருந்து 2 குழந்தைகள் உருவாகும்போது, சில காரணங்களால் இரட்டைக் குழந்தைகள் பிரிவதில் தாமதம் ஏற்பட்டாலோ, அந்த முட்டைக் கரு முழுமை அடையாமல் இருந்தாலோ இதுபோன்று வித்தியாசமான குழந்தைகள் பிறக்கும் என்றார்.

இந்தச் செய்தி சுற்று வட்டாரங்களில் பரவத் தொடங்கியது. 4 கைகள், 4 கால்கள், 4 காதுகளுடன் பிறந்த குழந்தையைப் பார்க்க முதியோர் இல்லத்தில் ஏராளமான மக்கள் திரண்டனர். சிலர் இக்குழந்தையை ஒரு தெய்வீக அவதாரம் என்று கூறினர்.

 

(Visited 26 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!