இலங்கை செய்தி

இலங்கையில் டொலரைக் கொடுத்து ரூபாவைப் பெற்றுக்கொள்ளும் மக்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது.

இதனால், கொழும்பு பிரதான நாணயமாற்று நிலையங்களில், டொலரைக் கொடுத்து, ரூபாவைப் பெற்றுக்கொள்ள வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை அவதானிக்க முடிகிறது.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் நாணயமாற்று விகிதத்தின்படி, நேற்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனை பெறுமதியில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 307.36 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 325.52 ரூபாவாகவும் இருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் விற்பனைப் பெறுமதி, 328 ரூபா 90 சதமாக பதிவாகி உள்ளதென மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி, 311 ரூபா 62 சதமாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, ரூபாவின் மதிப்பேற்றத்தின் பயன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றில் இன்று வலியுறுத்தியது.

சபையில் இன்று முற்பகல் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை வலியுறுத்தினார்.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை