இலங்கை செய்தி

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் – சீனாவிடம் விஜித முன்மொழிவு

நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை சீனாவின் ஒரு நன்கொடையாக நிறுவுவது குறித்து அவதானம் செலுத்துமாறு அமைச்சர் விஜித ஹேரத் முன்மொழிந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று (29) இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹாங்குடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இந்த முன்மொழிவை முன்வைத்தார்.

சீனா உள்ளிட்ட உலகளாவிய சந்தையிலிருந்து இலங்கை அதிகளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய முனைப்பு காட்டி வரும் பின்னணியில் அமைச்சர்
இதனை முன்மொழிந்துள்ளார்.

எதிர்காலத்தில் அதிகளவிலான மின்சார பேருந்துகளை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், இத்தகைய சார்ஜிங்
உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மிகவும் அவசியமானதும் முக்கியமானதுமான ஒரு நடவடிக்கையாகும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்த முன்மொழிவை சாதகமாக ஏற்றுக்கொண்ட சீனத் தூதுவர், இது குறித்து சீன அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு இணக்கம் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!