வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் அடித்துக் கொலை
வங்கதேசத்தில்(Bangladesh) திபு சந்திர தாஸ்(Tipu Chandra Das) அடித்துக் கொல்லப்பட்டு, அவரது உடல் தீக்கிரையாக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு இந்து நபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராஜ்பாரியின்(Rajbari) பங்ஷா(Bangsha) துணை மாவட்டத்தில் 29 வயதான அம்ரித் மொண்டல்(Amrit Mondal) என்ற சாம்ராட்(Samrat) கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘சாம்ராட் பஹினி'(Samrat Bahini) என்ற குற்றவியல் கும்பலின் தலைவராக சாம்ராட் இருந்ததாகவும் மிரட்டி பணம் பறிப்பதில் ஈடுபட்டதாகவும் உள்ளூர்வாசிகள் வங்கதேச ஊடகமான தி டெய்லி ஸ்டாரிடம்(The Daily Star) தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரும் அவரது கும்பலைச் சேர்ந்த சிலரும் ஷாஹிதுல் இஸ்லாம்(Shahidul Islam) என்ற கிராமவாசியின் வீட்டிற்கு பணம் பறிக்கச் சென்ற போது கிராமவாசிகளால் அடித்து கொல்லப்பட்டுள்ளார்.





