பஞ்சாபின் 3 நகரங்களில் தடை செய்யப்பட்ட இறைச்சி, மது மற்றும் புகையிலை
பஞ்சாபில்(Punjab) அமிர்தசரஸ் சுவர் நகரம்(walled city of Amritsar), தல்வண்டி சபோ(Talwandi Sabo) மற்றும் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்(Sri Anandpur Sahib) ஆகிய இடங்களில் இறைச்சி, புகையிலை, மது மற்றும் பிற போதைப்பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீக்கியர்களிடையே மிகுந்த மரியாதைக்குரிய இந்த மூன்று இடங்களுக்கு புனித நகர அந்தஸ்து வழங்கப்பட்ட பின்னர் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் சிங் மான்(Bhagwant Singh Mann) குறிப்பிட்டுள்ளார்.
“உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பகவந்த் சிங் மான் தெரிவித்துள்ளார்.
மேலும், பக்தர்களுக்கு மின்-ரிக்ஷாக்கள்(e-rickshaws), மினி-பஸ்கள்(mini-buses) மற்றும் பிற பொது போக்குவரத்து சேவைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.





