இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்க தயாராகும் அரசாங்கம்!
இலங்கையில் சகல துறைகளையும் டிஜிட்டல் மயமாக்குவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தி இருப்பதாகப் பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் வேலை தேடுபவர்களுக்குப் பதிலாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆட்களை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சி கொழும்பில் உள்ள மண்டபக் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவும் உரையாற்றினார்.
இலங்கை மக்கள் உலகத்துடன் இணைந்து செல்கையில் டிஜிட்டல் தொழில்நுட்பம் பற்றிய அறிவு முக்கியமானது என அமைச்சர் கூறினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாக சமூகமயப்படுத்தப்படும் தகவல்களின் உண்மைத்தன்மையை அறிந்து வைத்திருப்பது முக்கியமானது என பிரதியமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரட்ன குறிப்பிட்டார்.





