இலங்கை

ஆண்டுக்கு 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் உற்பத்தி – ஆபத்து குறித்து எச்சரிக்கும் இலங்கை அமைச்சர்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் டன்னுக்கும் அதிகமான பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்தப் பிளாஸ்டிக் உற்பத்தி சுற்றுச்சூழல் மாசுபாடு, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் எதிர்காலச் சந்ததியினருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் (Water’s Edge) வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இலங்கை அரசாங்கம் முறையான பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஏற்கனவே ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல. அரசாங்கத்தின் பசுமைக் கொள்கைகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும்போதுதான் உண்மையான மாற்றம் ஏற்படும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன், தற்போது தேசியக் கழிவு மேலாண்மைச் செயற்திட்டம் (National Waste Management Action Plan) நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!