உலகம் செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை மும்மடங்காக அதிகரிக்கும் தென்கொரியா!

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான நிதியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் ( Lee Jae Myung) தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு பாதுகாப்பு செலவினங்களில் திட்டமிடப்பட்ட 8.2% அதிகரிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட உரையை இன்று ஆற்றிய  அவர் இந்த கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிப்பது இராணுவத்தின் ஆயுத அமைப்புகளை நவீனமயமாக்கவும் அமெரிக்காவை நம்பியிருப்பதைக் குறைக்கவும் உதவும் என்று அவர் கூறினார்.

728 டிரில்லியன் வோன் ($506 பில்லியன்) முன்மொழியப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்காக 66.3 டிரில்லியன் வோன் ($46 பில்லியன்) முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 6 times, 6 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!