இந்தியப் பெருங்கடலில் நில அதிர்வு – இலங்கை நிலை என்ன?
இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
6.0 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வு மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குத் தொலைவில் ஏற்பட்டுள்ளதால், எந்தவிதமான சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இருப்பினும், உயிர்ச் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்த எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த நில அதிர்வினால் இலங்கை மற்றும் இந்தியக் கடற்கரைகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)





