ஐரோப்பா செய்தி

இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள் – இரவு முழுவதும் பதற்றத்தில் போலந்து!

ரஷ்யா  650 ட்ரோன்கள் மற்றும் 50 ஏவுகணைகளை கொண்டு உக்ரைன் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் சபோர்ஜியாவில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அத்துடன் நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஏவுகணைகள் போலந்தின் எல்லையை தாண்டிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நாட்டை தற்காத்துக்கொள்ள போலந்தும் போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

கின்சல் வான்வழி ஏவுகணைகள் Kinzhal air-launched missiles, பாலிஸ்டிக் வெடிக்கும் ஆயுதங்கள் ballistic explosive weapons, Kh-101 கப்பல் ஏவுகணைகள் மற்றும் கொலையாளி “காமிகேஸ்” ஷாஹெட் ட்ரோன்கள் “kamikaze” Shahed drones ஆகியவை ஏவப்பட்டுள்ளதாக தி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைன் முழுவதும் எச்சரிக்க அலாரம் ஒலித்ததுடன், கிட்டத்தட்ட அனைத்து பிராந்தியங்களிலும் வான் பாதுகாப்பு செயல்படுத்தப்பட்டது.

சபோரிஜியா பகுதி குறைந்தது 20 ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளிலிருந்து பல மணிநேர தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 5 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி