சிகாகோவிற்கு 300 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அங்கீகாரம் அளித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிகாகோவிற்கு 300 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப அங்கீகாரம் அளித்துள்ளார்.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு நெருக்கடியை உருவாக்க முயற்சிப்பதாக இல்லினாய்ஸ் நகர ஆளுநர் ஜே.பி. பிரிட்ஸ்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சிகாகோவில் வன்முறை குற்றங்கள் கணிசமாகக் குறைந்துள்ளன.
மேலும் அமெரிக்க குற்றவியல் நீதி கவுன்சிலின் கூற்றுப்படி, ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையிலான கொலை விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
(Visited 5 times, 1 visits today)





