ஐரோப்பா

பிரான்ஸில் பெண்களை பாதுகாக்க தீவிர முயற்சி

பிரான்ஸில் பெண்களுக்காக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.

பொது இடங்களுக்கு வரும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல்கள் இடம்பெறாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் இவ்வருடத்தின் கோடை காலம் முழுவதும் இந்த சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் பொது இடங்கள் நேரத்தை செலவிடும் பெண்கள் அதிகளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.

அதுபோன்ற சம்பவங்களின் போது சிறப்பு கண்காணிப்பில் ஈடுபடும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பத்தில் 8 பெண்கள் இரவில் வெளியில் செல்ல பயப்பிடுகிறார்கள் என ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அதேவேளை, 2020 ஆம் ஆண்டில் 220,000 பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!