பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோ மருத்துவமனையில் அனுமதி

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவிற்கு உடல்நல குறைவால் தலைநகர் பிரேசிலியாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு பிரச்சாரத்தின் போது கத்தியால் குத்தப்பட்டதிலிருந்து போல்சனாரோவுக்கு குடல் பிரச்சினைகள் மீண்டும் மீண்டும் ஏற்பட்டுள்ளன, இதில் ஆறு அறுவை சிகிச்சைகள் அடங்கும், கடைசியாக ஏப்ரல் மாதத்தில் 12 மணி நேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவரது மகன் ஃபிளாவியோ, Xல் ஒரு பதிவில், முன்னாள் தலைவர் கடுமையான விக்கல், வாந்தி மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் இருப்பதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினார்.
கடந்த வாரம், முன்னாள் ஜனாதிபதிக்கு 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சிக் கவிழ்ப்பு சதி செய்ததற்காக உச்ச நீதிமன்றக் குழுவால் 27 ஆண்டுகள் மற்றும் மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.