மத்திய கிழக்கு

ஈரானில் 11 கணவர்களை நஞ்சளித்து கொன்ற பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

ஈரானில், 22 ஆண்டுகளாக 11 கணவர்களை நஞ்சு கொடுத்து கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது பெண்க்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை நடந்த இந்த கொலைச் தொடரில், எத்தனை பேரை கொன்றேன் என நினைவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அக்பரியின் முதல் இரண்டு திருமணங்கள் தோல்வியடைந்தன. அதன்பின், வயதான நபர்களுடன் திருமணம் செய்து, அதிக அளவு வரதட்சணை பெற்றார்.

சில மாதங்களுக்குள், அந்த கணவர்களை நஞ்சு கொடுத்து கொன்றார். 11 நபர்களில் ஒருவர் மட்டும் உயிர்தப்பியுள்ளார், ஆனால் அவர் புகார் அளிக்கவில்லை.

அக்பரி மணந்த ஆண்கள் வெவ்வேறு நகரங்களில் வசித்தனர். இதனால், முதற்கட்டமாக அனைத்து மரணங்களை ஒன்றோடொன்று தொடர்புபடுத்த முடியவில்லை.

2023இல் அவர் இறுதியாக கைது செய்யப்பட்டபோது, கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்றிருந்த கொலைகள் அம்பலமானது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அக்பரியின் தீவிர மனநிலை, திட்டமிட்ட கொலைகள் மற்றும் அவை ஏற்படுத்திய சமூகப் பாதிப்புகளை கருத்தில் கொண்டு, மரண தண்டனை வழங்கியுள்ளது.

இந்த சம்பவம் ஈரானில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.
Skip to content