இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் வரை காலக்கெடு – கடும் கோபத்தில் டிரம்ப்

உக்ரேன் போரை நிறுத்துவதற்கு ஒப்பந்தம் செய்துகொள்ள ரஷ்யாவுக்கு நாளை மறுநாள் வரை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய செயல்களால் பொறுமை இழந்து வருவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஜனாதிபதி டிரம்ப்புடன் ஆக்ககரமான பேச்சுவார்த்தை நடத்தியதாக உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்யா மீது தடைகள் விதிப்பது குறித்தும் அமெரிக்கா உக்ரேனிடமிருந்து ஆளில்லா வானூர்திகளை வாங்குவது குறித்தும் இருவரும் பேசியதாக ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரேன் தலைநகர் கீவ் உட்படச் சில நகர்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் பற்றி டிரம்ப்பிடம் முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்