இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் நடுவானில் காத்திருந்த ஆபத்து – 2 விமானங்கள் மோதிக் கொள்ளவிருந்த விபத்து தவிர்ப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஏர்பஸ் A320 விமானம் ஒன்று இராணுவ விமானத்துடன் மோதுவதை நொடிப்பொழுதில் தவிர்த்துள்ளது.

இதன்போது திடீரென விமானங்கள் சுமார் 500 அடி உயரத்தில் இருந்து கீழே இறங்கியதாக விமானப் போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நேரத்தில் விமானத்தை இயக்கிய இரு விமானிகளும் காயமடைந்துள்ளனர். தற்போது வரை பயணிகளுக்குச் சீரியமான காயங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை. விமானம் பின்னர் பாதுகாப்பாக லாஸ் வேகஸ் நகரத்தில் தரையிறங்கியது.

விமானத்தில் பயணித்த ஒருவர், “நாம் எதிரே வந்த விமானத்துடன் மோதியிருக்கக்கூடும்” என்று விமானி பயணிகளிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். சம்பவம் நடந்தபோது விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் பெரும் பதற்றத்தில் சிக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவம் இதுவரை எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேவொரு வாரத்தில் இது இரண்டாவது முறை ராணுவ மற்றும் பயணிகள் விமானங்கள் மோதக்கூடிய அபாய நிலை உருவாகிறது. மார்ச் மாதம் முதல் இதற்கு முன்பு மூன்று முறை இவ்வாறான நிலைமை உருவானது குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 7 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content