கியூபா ஜனாதிபதி உட்பட மூத்த அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவுத்துறை, ஜனாதிபதி மிகுவல் டயஸ்-கேனல் உட்பட மூத்த கியூப அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க அரசாங்க எதிர்ப்பு போராட்டங்கள் மீதான மிருகத்தனமான ஒடுக்குமுறையின் நான்காவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் போது, வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார்.
Xல் ஒரு பதிவில், ரூபியோ, “கியூப ஆட்சியின் கியூப மக்கள் மீதான மிருகத்தனத்தில்” அவர்களின் பங்கிற்காக, ஜனாதிபதி டயஸ்-கேனல், பாதுகாப்பு அமைச்சர் அல்வாரோ லோபஸ் மியேரா, உள்துறை அமைச்சர் லாசரோ ஆல்பர்டோ அல்வாரெஸ் காசாஸ் மற்றும் அவர்களின் “நண்பர்கள்” உட்பட, வெளியுறவுத்துறை “கியூப ஆட்சித் தலைவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்தும்” என்று பதிவிட்டுள்ளார்.
கியூப குடியேறிகளின் மகனான ரூபியோ, “கியூப ஆட்சியின் அடக்குமுறைக்கு அமெரிக்க டாலர்கள் நிதியளிப்பதைத் தடுக்க” வெளியுறவுத்துறை டோரே கே ஹோட்டலை அதன் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் சேர்த்துள்ளதாகவும் அறிவித்தார்.
கியூப அரசாங்கம் மத்திய ஹவானாவில் உள்ள ஆடம்பர உயரமான டோரே கே ஹோட்டலை நவீனமயமாக்கலின் அடையாளமாக விளம்பரப்படுத்தியுள்ளது.
“கியூப மக்கள் உணவு, தண்ணீர், மருந்து மற்றும் மின்சாரம் பற்றாக்குறையால் அவதிப்படும் அதே வேளையில், ஆட்சி அதன் உள்நாட்டினருக்கு பணத்தை வாரி இறைக்கிறது” என்று ரூபியோ குற்றமச்சட்டியுள்ளார்.