விமானத்தின் குளியறையில் இருந்த மிரட்டல் துண்டு : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

TUI பயணிகள் விமானத்தின் குளியலறையில் ஒரு அச்சுறுத்தும் குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பயணிகள் அனைவரையும் வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கார்டிஃப்-கேனரி தீவுகள் விமானம் BY6422 போர்ச்சுகல் மீது பறந்து கொண்டிருந்தபோது, அதன் விமானியிடம் ஒரு குழு உறுப்பினர் கடிதத்தை வழங்கியுள்ளது.
அந்த விமானம் சீசர் மன்ரிக்-லான்சரோட் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது, அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்ட பின்னர் GEDEX (வெடிபொருள் செயலிழப்பு குழு) மற்றும் பல சிறப்புப் பிரிவுகளைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை சுற்றிவளைத்ததுள்ளனர்.
அச்சுறுத்தலை தொடர்ந்து போர்த்துகீசிய போர் விமானங்கள் விரைந்து சென்று விமானத்தை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்று சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
விசாரணைப் பிரிவுகள் மற்றும் குடிமக்கள் பாதுகாப்பு ரோந்துகளுடன் கார்டியா சிவிலின் நிதி மற்றும் எல்லைப் பிரிவும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டது.