இஸ்ரேலில் பற்றி எரியும் காட்டுத்தீ – மக்களை வெளியேற்ற நடவடிக்கை

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள எஸ்தாவோல் காட்டில் ஒரு பெரிய புதர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, இஸ்ரேலிய அதிகாரிகள் அங்குள்ள மக்களை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்து டெல் அவிவ்-ஜெருசலேம் நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால், சாலையை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தலைநகர் டெல் அவிவிற்கு மேற்கே உள்ள இந்த மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, ஒரு வாரத்தில் குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
(Visited 36 times, 1 visits today)