வட அமெரிக்கா

அமெரிக்காவில் 100,000 முட்டைகள் திருட்டு – தொடரும் மர்மம் – குழப்பத்தில் பொலிஸார்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் 100,000 முட்டைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலையின் காரணமாக அந்தத் திருட்டு நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. சம்பவம் பற்றிய தகவல் அறிந்தோர் தன்னைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பறவைக் காய்ச்சலின் காரணமாகப் பல பண்ணை உரிமையாளர்கள் மில்லியன் கணக்கான கோழிகளைக் கொல்ல நேர்ந்தது.

அதன் விளைவாக 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் முட்டை விலை இரட்டிபாகியுள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் பன்னிரண்டு முட்டைகளின் சராசரி விலை 4.15 டொலராக இருந்தது.

இவ்வாண்டு முட்டை விலை மேலும் 20 சதவீதம் உயரலாம் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க வேளான்மை அமைச்சு தெரிவித்தது.

(Visited 2 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்