இலங்கையில் பிரித்தானிய பிரஜையொருவர் மரணம்

கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள தங்கும் விடுதியில் திடீரென வாந்தி எடுத்த பிரித்தானிய பெண், அங்கு தங்கியிருந்த தம்பதியருடன் நேற்று (1) கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதான பிரித்தானிய பிரஜை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை வைத்திய அதிகாரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். (
(Visited 11 times, 1 visits today)