ஐரோப்பா

ஜெர்மனியில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 540 யூரோ கொடுப்பனவு

ஜெர்மனி நாட்டில் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருப்பவர்களுக்கு 540 யூரோ வழங்கப்படவுள்ளது.

21 மில்லியன் ஜெர்மனியர்கள் தற்பொழுது ஓய்வு ஊதியம் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் எதிர்வரும் ஆடி மாதம் தொடக்கம் 540 யுரோ மேலதிக பணமாக வழங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த 540 யூரோ என்று சொல்லப்படுவது வருடாந்தத்துக்கு வழங்கப்படுகின்ற அதிகரிப்பாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேற்கு ஜெர்மனி பிரதேசத்தில் ஓய்வூதியத்தினுடைய உயர்வு கிழக்கு ஜெர்மனியுடன் ஒப்பிடும் பொழுது குறைவாக காணப்படும்.

மேலும் மேற்கு ஜெர்மனியில் ஓய்வூதியத்தை பெறுகின்ற நபர் 1000 யுரோ வை பெறுவார் என்றால் அவருக்கு 1044 யூரோவாக எதிர்வரும் காலங்களில் அதிகரிக்கப்படும்.

இதேவேளையில் கிழக்கு ஜெர்மனியில் 1000 யுரோவை ஓய்வு ஊதியமாக பெறுகின்றவர் மாதாந்தம் 1060 யூரோவை 1.7.2023 இல் இருந்து பெற்றுக்கொள்வார் என்றும் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியின் பிரபல பத்திரிகை இத்தகவலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்