இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையின் பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் அபாயம் – அமெரிக்கா அவசர எச்சரிக்கை

அறுகம்பே பிரதேசத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் நம்பகமான தகவல்களுடன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பாரிய ஆபத்து காரணமாக, மறு அறிவித்தல் வரை அருகம்பேக்கு அமெரிக்க தூதரகம் பயணத்தடை விதித்துள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளை கடுமையாக கேட்டுக்கொள்கின்றோம் என தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கு இடமான செயற்பாடுகள் அல்லது அவசர நிலை குறித்து 119 என்ற இலக்கத்துக்கு அழைப்பை மேற்கொள்ளுமாறு தமது பிரஜைகளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கோரியுள்ளது.

எவ்வாறாயினும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளினது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப்பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, மத்திய கிழக்கு உட்படக் கிழக்கு ஐரோப்பியாவில் ஏற்பட்டுள்ள யுத்தத்தைக் கருத்திற்கொண்டு, இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு என்பன அறிவுறுத்தியுள்ளன.

(Visited 115 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!