சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் நபர் ஒருவர் மூன்று குழந்தைகளை தாக்கிய காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நகரின் மையத்திற்கு வடக்கே உள்ள ஓர்லிகான் மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில், பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும் தாக்குதல்தாரி குறித்த விபரங்களையும், தாக்குதல் நடத்தப்பட்டமைக்கான நோக்கம் உள்ளிட்ட விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
(Visited 61 times, 1 visits today)