உலகம் செய்தி

பாரிஸ் விமான நிலையத்தில் Telegram செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி கைது

Telegram செயலியின் தலைமை நிர்வாக அதிகாரி செல்வந்தர் பேவல் டூரோவ் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாரிஸ் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அஸெர்பைஜானிலிருந்து அவரது தனிப்பட்ட விமானத்தில் வந்து இறங்கியபோது பாரிஸில் அவர் கைதானதாகத் தெரிகிறது.

Telegram தளத்தில் போதுமான நெறியாளர்கள் இல்லை. எனவே அதில் இடம்பெறும் குற்றச்செயல்கள் கண்காணிக்கப்படுவதில்லை என்று காவல்துறை நம்புகிறது.

ரஷ்யாவைச் சேர்ந்த டூரோவ் துபாயில் Telegram தளத்தைத் தொடங்கினார். அவர் தொடங்கிய VK சமூக ஊடகத் தளத்தை எதிர்க்கட்சியினர் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு ரஷ்ய அரசாங்க உத்தரவிட்டது. அதை ஏற்க மறுத்து அவர் ரஷ்யாவைவிட்டு 2014இல் வெளியேறினார்.

Facebook, YouTube, WhatsApp, Instagram, TikTok, Wechat ஆகியவற்றுக்கு அடுத்துப் பெரிய சமூக ஊடகத் தளமாக Telegram கருதப்படுகிறது. அடுத்த ஆண்டுக்குள் ஒரு பில்லியன் பேரை அடைய வேண்டும் என்று அது திட்டமிடுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!