செய்தி வாழ்வியல்

தினமும் படிக்கட்டுகள் ஏறினால் ஏற்படும் நன்மைகள்!

நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாக இருக்கும். அந்த வகையில் துரிததியிலான வாழ்க்கையில், பயிற்சி செய்ய நேரமில்லை என்று வருந்த வேண்டாம். தினமும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் படிக்கட்டுகளை ஏறி இறங்குவதை வழக்கமாகக் கொண்டாலே போதும். பல நோய்களுக்கு குட் நைட் சொல்லி விடலாம்.

இதயம் ஆரோக்கியம்: தினமும் 7 நிமிடம் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், கொலஸ்ட்ரால் எரிக்கப்பட்டு இதய நோய்கள், மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் பெரிதளவு குறையும் என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தமும் இதனால் கட்டுக்குள் இருக்கும் என்கின்றனர் சுகாதார வல்லுநர்கள்.

நுரையீரல் ஆரோக்கியம்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதால், நுரையீரல் செயல்பாடும் மேம்படும். நுரையீரலுக்கான ரத்த ஓட்டம் மேம்பட்டு, சுவாச கோளாறுகளில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

மன அழுத்தத்தை போக்கும் பயிற்சி: படிக்கட்டிகளில் ஏறி இறங்குவதால் உடல் வலிமை மேம்படுவதோடு மட்டுமல்லாமல், மன வலிமையும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே மன அழுத்தமும் பதற்றமும் குறைய தினமும் படி ஏறுவதும் இறங்குவதும் நல்லது.

எலும்பு ஆரோக்கியம்: தினமும் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது தசைகளியும் எலும்புகளையும் பலப்படுத்துகிறது. எலும்பு அடர்த்தி அதிகரிப்பதால், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு முறிதல் நோய் வருவது தடுக்கப்படும். வலுவான எலும்பு காரணமாக மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் அடையலாம்.

உடல் பருமன்: தினமும் படிகட்டுகளில் ஏறி இறங்குவதால், நடப்பதை விட அதிக கலோரிகள் எரிக்கப்படும். இதனால் உடல் எடை வேகமாக குறைவதால் உடல் பருமன் கட்டுக்குள் இருக்கும்.

படியேறி இறங்குதல்: ஆரோக்கியமான வாழ்விற்கு, லிப்ட் எஸ்கலேட்டர் போன்ற வசதிகளை பயன்படுத்தாமல், படி ஏறி இறங்குவதை வழக்கமாக்கிக் கொண்டால், நோயற்ற வாழ்வை வாழலாம். உடற்பயிற்சி செய்ய நேரமில்லை என்பவர்களுக்கு, இந்த முறையை கடைபிடிப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.

(Visited 21 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!