ரயில் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது

இன்று (11) நள்ளிரவு முதல் தொடரூந்து பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டுவர ரயில்வே தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
பல கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பதாம் திகதி நள்ளிரவு முதல் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)