ஐரோப்பா

ஹாங்காங் உளவுத்துறைக்கு உதவியதாக மூவர் மீது பிரித்தானியா குற்றச்சாட்டு

ஹாங்காங் உளவுத்துறை மற்றும் வெளிநாட்டு தலையீட்டிற்கு உதவியதாக 3 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மூவரும் பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் காவலில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கபப்ட்டுளள்து.

ஹாங்காங் விசாரணை ரஷ்யா சம்பந்தப்பட்ட ஒரு தனி வழக்குடன் தொடர்புடையது அல்ல என்று பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

விசாரணையின் ஒரு பகுதியாக, தேசிய பாதுகாப்புச் சட்டம் பிரிவு 27ன் கீழ் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று ஆண்கள்: சி லியுங் (பீட்டர்) வாய், 38, ஸ்டெயின்ஸ்-அன்-தேம்ஸ்; மைடன்ஹெட்டைச் சேர்ந்தவர் மேத்யூ டிரிக்கெட், 37; மற்றும் ஹாக்னியைச் சேர்ந்த 63 வயதான சுங் பியு யுவன்.

Met’s Counter Terrorism Command இன் தலைவரான கமாண்டர் டோமினிக் மர்பி “பொதுமக்களுக்கு எந்தவொரு பரந்த அச்சுறுத்தலும் இல்லை என்று நாங்கள் நம்பவில்லை என்பதை தான் உறுதியளிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விசாரணை தொடர்கிறது, ஆனால் இப்போது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக மக்கள் ஊகிக்கவோ அல்லது கருத்து தெரிவிக்கவோ கூடாது என தெரிவித்துள்ளார்.

யோர்க்ஷயர் பகுதியில் எட்டு ஆண்களும் ஒரு பெண்ணும் மே 1 ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அடுத்த நாள், லண்டனில் ஒரு நபர் கைது செய்யப்பட்டார், மேலும் ஒருவர் யார்க்ஷயர் பகுதியில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 63 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்