தாமரைக் கோபுரம்: பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் கீழே விழுந்து படுகாயம்
தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் நிகழ்வை அனுபவிக்கும் போது வெளிநாட்டவர் ஒருவர் கீழே விழுந்ததில் காயம் அடைந்தார்.
சற்று முன்னர் தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் போட்டியில் கலந்து கொண்ட வெளிநாட்டவர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
கோபுரத்தில் இருந்து குதித்த பின்னர் குறித்த வெளிநாட்டவர் தனது பரசூட்டை இயக்குவதில் தாமதித்ததாக சம்பவத்தைநேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
காயமடைந்த வெளிநாட்டவர் உடனடியாக பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
(Visited 19 times, 1 visits today)





