Skip to content
August 21, 2025
Breaking News
Follow Us
ஆசியா

ஆசிய நாடுகளை உலுக்கும் வெப்பம் – இந்தியாவில் 9 பேர் உயிரிழப்பு

பல ஆசிய நாடுகளில் இந்த நாட்களில் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது.

இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் கிணற்று நீரையே பயன்படுத்துவதாகவும், கிணறுகள் வற்றிவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 28.12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்தப் பகுதிகளில் மற்ற பருவங்களில் பதிவான வெப்பநிலையின் சராசரி மதிப்பு 22.1 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, கிழக்கிந்தியாவில் 1973 முதல் ஏப்ரல் மாதம் அதிக வெப்பமான ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்