ஐரோப்பா

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதிகளை “புதிய ரஷ்யா” என்று அறிவித்த புடின்

டான்பாஸ் மற்றும் பிற ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளை “புதிய ரஷ்யா” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார்.

மாஸ்கோவின் ரெட் சதுக்கத்தில் தனது மறுதேர்தல் மற்றும் கிரிமியாவை ரஷ்யா இணைத்ததன் 10வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் உரையின் போதே புடின் இதனை தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் சில பகுதிகள் வழியாக ஒரு புதிய ரயில் இணைப்பு கட்டப்பட்டு வருவதாக புடின் மேலும் கூறியதுடன் அந்த பகுதிகள் “தங்கள் சொந்த குடும்பத்திற்கு திரும்புவதற்கான விருப்பத்தை அறிவித்துள்ளன” என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் வழியாக கிரிமியா வரை புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று புடின் மேலும் அறிவித்தார். இந்த பாதையானது தீபகற்பத்தை ரஷ்யாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் தற்போதைய பாலத்திற்கு மாற்று வழியாக அமையும்.

“இவ்வாறு ஒன்றாக, கைகோர்த்து, நாம் முன்னேறுவோம். இதுதான் – வார்த்தைகளில் அல்ல, ஆனால் செயல்களில் – நம்மை மிகவும் வலிமையாக்குகிறது” என்று புடின் கூறினார்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!