ஆசியா செய்தி

மியான்மர் மோதலால் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் – ஐ.நா

மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களுக்கும் இன ஆயுதக் குழுக்களின் கூட்டமைப்பிற்கும் இடையிலான உக்கிரமான மோதல் காரணமாக சுமார் 90,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

“நவம்பர் 9 ஆம் தேதி நிலவரப்படி, வடக்கு ஷானில் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்” என்று ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) ஒரு புதுப்பிப்பில் தெரிவித்துள்ளது.

நவம்பர் தொடக்கத்தில் இருந்து அண்டை நாடான Sagaing பிராந்தியம் மற்றும் Kachin மாநிலத்தில் இராணுவத்திற்கும் அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்களால் மேலும் 40,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்,

இரண்டு வாரங்களுக்கு முன்பு, மியான்மரின் மிகவும் சக்திவாய்ந்த இன ஆயுதக் கூட்டணிகளில் ஒன்றான மூன்று சகோதரத்துவக் கூட்டணி, சீனாவுடனான நாட்டின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள வடக்கு ஷான் மாநிலத்தில் உள்ள பல இராணுவப் புறக்காவல் நிலையங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலைத் தொடுத்து, எல்லை நகரமான சின் ஷ்வேயைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content