இலங்கை செய்தி

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள 82 பாதாள குழு உறுப்பினர்களுக்குச் சிவப்பு பிடிவிறாந்து!

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழு உறுப்பினர்களை நாட்டுக்குக் கொண்டுவந்து, சட்டத்தின் முன் நிறுத்துவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அரசாங்கத் தொலைக்காட்சிக்கு நேற்றிரவு வழங்கிய நேர்காணலின்போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

“216 பேருக்கு எதிராகச் சிவப்புப் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் பாதாள குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லர். சுமார் 82 பேரே பாதாள குழுவுடன் தொடர்புடையவர்கள். பாதாள குழுவைச் சேர்ந்தவர்களில் 17 பேர் இதுவரையில் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.” எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பாதாள குழுவைச் சேர்ந்தவர்களில் அதிகளவானோர் துபாயிலேயே இருக்கின்றனர். சிலர் வெளிநாட்டுச் சிறைகளில் உள்ளனர். இவர்களைக் கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர நடவடிக்கையும் இடம்பெறுகின்றது. இந்தோனேசியாவில் முன்னெடுக்கப்பட்டதுபோல எதிர்காலத்தில் நடவடிக்கைகள் இடம்பெறும்.

“இந்நாட்டில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு வெளிநாடுகளில் பதுங்கி வாழ்வதற்கு இடமளிக்க மாட்டோம். அவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இதற்கு நீதி அமைச்சின் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்று வருகின்றது.” – எனப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் குறிப்பிட்டார்.

(Visited 3 times, 3 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை