இலங்கை

75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம்! விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை

சுமார் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணம் தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியதாகக் கூறப்படும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு மேல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன, இந்த வழக்கு 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட போதிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதி விமல் வீரவன்ச நீதிமன்றில் ஆஜராகவில்லை எனவும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி வழக்கை மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி, அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு விமல் வீரவாஞ்சவுக்கு அழைப்பாணையும் பிறப்பித்துள்ளார்.

See also  இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அமைச்சராக இருந்த விமல் வீரவங்ச, சுமார் 75 மில்லியன் .ரூபாய் பெறுமதியான சொத்து மற்றும் பணத்தை கையகப்படுத்தியமை தொடர்பான தகவல்களை வெளியிடத் தவறியமைக்காக இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

(Visited 15 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content