இந்தியா செய்தி

உத்தரகாண்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழப்பு

உத்தரகாண்ட்(Uttarakhand) மாநிலம் அல்மோரா(Almora) மாவட்டத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்ததாகவும் 12 பேர் காயமடைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அல்மோராவில் உள்ள துவாரஹத்தில்(Dwarahat) இருந்து நைனிடாலில்(Nainital) உள்ள ராம்நகருக்கு(Ramnagar) பேருந்து சென்று கொண்டிருந்தபோது ​​பிகியாசைன்(Bhikiasain) பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மூத்த காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர பிஞ்சா(Devendra Pincha) தெரிவித்துள்ளார்.

18 முதல் 19 பயணிகள் வரை வாகனத்தில் இருந்தபோது ​​ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் பள்ளத்தாக்கில் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!