இலங்கை

இலங்கை பாடசாலைகளில் குறைவடைந்த 40,000 மாணவர்கள்

கடந்த பத்து வருடங்களில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு சிறுவர்களை சேர்ப்பது சுமார் 40,000 ஆக குறைந்துள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைப்பேறுகள் குறைவடைந்தமையே இந்த நிலைமைக்குக் காரணம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் கூறுகிறார்.

கல்வி அமைச்சின் தரவுகளை அவதானிப்பதன் மூலம் அரச பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு உள்வாங்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாகவும், 2021ஆம் ஆண்டில் 304,105 மாணவர்கள் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு முதலாம் தரத்திற்குச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து 292,216 ஆகக் குறைந்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக ஆரம்பப் பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களும் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 42 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!