பொலிவியாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பலி

பொலிவியாவில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் 37 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தென்மேற்கு நகரமான உயுனியில் இருந்து 5 கிமீ (3 மைல்) தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓட்டுநர்களில் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார், மற்றொருவர் நிலையான நிலையில் உள்ளார் என்று போலீஸ் கமாண்டர் வில்சன் புளோரஸ் தெரிவித்தார்.
லத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய விழாக்களில் ஒன்றான ஒருரோ கார்னிவல் நடைபெற்று வந்த மேற்கு நகரமான ஒருரோவிற்கு சென்று கொண்டிருந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இறந்தவர்கள் அடையாளம் காணப்படவில்லை, காயமடைந்தவர்களின் நிலை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
(Visited 26 times, 1 visits today)