இலங்கை

இலங்கையில் 3,504 முப்படை வீரர்கள் கைது

இலங்கையில் 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், மற்றும் 278 விமானப்படை வீரர்கள் உள்ளடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களைக் கைது செய்ய, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கைது செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 2 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content