இலங்கை

2024 ஜனாதிபதி தேர்தல் தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான முழுமையான தகவல்!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக்கும் திகதிகளை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 26ம் திகதி தபால் ஓட்டுகள் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி, இராணுவத்தினர் மற்றும் அரச ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூலம் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய திகதிகள் கூடுதல் திகதிகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், 2024 ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிக்க 712,321 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content